Author laozi

தானாதல்

வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன்… Continue Reading →

‎முழுக்கத் தலைகொடுக்காமல் எதையும் இலக்கியத்தில் அறிவியக்கத்தில் ஈட்டமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திலேனும் வெறிகொண்டு செயல்படாதவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை. ஜெயமோகன்

தன்வழியறிதல்

இன்னும் மேலே மேலே என்று தான் தேடிக்கொண்டிருந்தேன். 11ல் வரலாறும், சமூகவியலும் பிடித்தாலும் அறிவியல் தான் மேலானது என அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். SRMல் பொறியியல் முடித்த பின், எல்லாரும் ITக்கு செல்கிறார்கள், அதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இன்னும் மேலே செல்ல இயலும் என இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றில் MBA… Continue Reading →

வெண்முரசின் உன்மத்தம்

வெண்முரசு நாவல் நிறையின் முடிவில் ஒரு வாசகனாக நான் பெற்றவை

வேணு வேட்ராயன் – குமரகுருபரன் விருது

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 ஜெ, சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன்… Continue Reading →

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை – ஜெயமோகன் கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத ஒரு ஆரம்ப நிலை வாசகன், தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனை சந்தித்தால்? ஊட்டி குரு நித்யா காவிய முகாமிலிருந்து… Continue Reading →

உளநலன்

மனநலன் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் குறித்த ஒரு சிறு அறிமுகம்.

சகடம் – நாகப்பிரகாஷ்

ஒரு சிறுகதை விவாதம் நாகப்பிரகாஷ் அவர்களின் சகடம் சிறுகதையும், அவரது கடிதமும் மேலுள்ள சுட்டியில். முதல் வாசிப்பு: அமுதனின் பார்வையில் கதை தொடங்குகிறது. அங்கங்கே அவன் பங்கு பெறாத காட்சிகள் கதைச்சொல்லியின் பார்வையில் வருகின்றன. கதையில் இறுதியில் கதைச்சொல்லியின் பார்வையில் ஒரு flashback காட்சி. ஒரு தருணத்தில், ஒரு வாசகத்தில் கதை முடிகிறது. முதல் வாசிப்பில், அந்த… Continue Reading →

மரபை அணுகுதல்

‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் ஜெ சென்னையில் நடத்திய கட்டண உரையின் பிறகு அவருக்கு எழுதிய கடிதம்: ஜெ, மரபு குறித்த உங்கள் உரையை இவ்வாறு தொகுத்துக்கொள்ள முயல்கிறேன்: ஒரு செல் உயிரி முதல், அனைத்து உயிர்களிடமும், தான் வாழவேண்டும், பெருக வேண்டுமென்ற உள்ளுணர்வு உள்ளது. அதைத் தாண்டி, தனது சூழலுக்கு ஏற்றவாறு… Continue Reading →

மிஸ்டர் கே – ஆத்மார்த்தி

ஜூலை மாத உயிர்மை இதழில் வெளிவந்த, எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர் கே’ என்ற கதை குறித்த எனது பார்வை: கதையை வாசித்திருக்காத நண்பர்களுக்காக, கதை குறித்த சிறு அறிமுகம்: கதைச்சொல்லி, தனது நோக்கத்தை கதையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறான். “மிஸ்டர். கே என்பவரை அறிமுகம் செய்து கொள்ளுதல்.”. சில மாதங்களாகவே அதற்கு முயன்றுக் கொண்டிருக்கிறான்…. Continue Reading →

கதையாடல் – வாசகசாலை

வாசகசாலை மற்றும் பனுவல் புத்தக விற்பனை நிலையம் இணைந்து நடத்தும் மாதாந்திர கதையாடல் நிகழ்வின் முப்பத்தி ஐந்தாம் அமர்வு கடந்த சனி (03/08/2019) அன்று நடைபெற்றது. நண்பர் காளிபிரசாத் (எழு. காளி), இந்த நிகழ்வில் பேச விருப்பமா என கேட்டிருந்தார். இலக்கிய நிகழ்வுகளில் பேசும் அளவிற்கு வாசிப்பு பின்புலமோ, அனுபவமோ இல்லை என்ற தயக்கம் இருந்தது…. Continue Reading →

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா 2019

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா -2019ல் நிகழ்ந்த உரைகளின் தொகுப்பு. மாலை விருது விழா, சுருதி டிவி நண்பர்கள் மூலம் காணொளியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிறுகதை அமர்வின் உரைகளையும் கட்டுரையாக பதிவேற்ற எழுத்தாளர்கள் சுனில் கிருஷணன், காளிப்பிரசாத் மற்றும் விஷால் ராஜாவிடம் கேட்டுள்ளேன். அவை கிடைத்தால், நிகழ்வு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு விடும். இப்பொழுதைக்கு, சிறுகதை அமர்வின் உரைகளை… Continue Reading →

ஜெவுடன் ஒரு நாள்!

மூன்றாம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மே 12 அன்று விருது அறிவிக்கப்பட்டதுமே, விழா ஏற்பாடுகள் சென்னை வட்டத்தின் சார்பில் தொடங்கி விட்டன. எனது பங்களிப்பாக அமைப்பினருடன் இணைந்து செயலாற்ற முடிந்தது சிறு மகிழ்ச்சி. வழக்கம் போல் நேற்று காலையே விருந்தினர்கள், அழைப்பாளர்கள் நண்பர்கள் என அனைவரும் விடுதி அறையில்… Continue Reading →

லாஓசி, வயது 27.

பூமிக்கு பாரம் சேர்க்க தொடங்கி 27 வருடங்கள். பூமிக்காவது பாரத்தை குறைக்கலாம் என்றால், எடை குறைந்த பாடில்லை. இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம். கடந்த வருடம், சொந்த வாழ்வில் பெரிய மாற்றங்கள். சில புதிய மனிதர்கள், புரிதல்கள், பழைய மனிதர்கள். வாழ்வின் அந்த பக்கங்களை பற்றி இப்பொழுது எழுதுவதாய் இல்லை. அதை தாண்டி,… Continue Reading →

கருகலைப்பு, கொலை, உரிமை

கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண் குழந்தை தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? ஒருவர், இவை மூன்றுமே ஒரே வகைதான். மூன்றுமே குற்றம் என கூறினால் என்ன நினைப்பீர்கள்? ஆம், அமேரிக்காவின் ஓஹையோ… Continue Reading →

சுப்ரமணியத்திலிருக்கும் நாஞ்சில்…

படைப்பிலக்கியம் சார்ந்து செயல்பட விரும்பும் பலரும், பொருளியல் தேவைகளுக்காக தங்களை ஒரு அலுவலக சூழலில் அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அலுவலக வாழ்க்கை தரும் அழுத்தங்கள், உளசிக்கல்கள் ஒருவரது மனநிலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில், ஒரு படைப்பாளி இந்த சவால்களை எப்படி எதிர்கொள்கிறான்? எனது தேடலினூடே எழுந்த கேள்வி இது. எந்த எழுத்தாளரை, தேர்ந்த… Continue Reading →

கேரளத்தில் இலக்கியம்

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஜெமோவின் பழைய பதிவுகளை வாசித்துக் கொண்டும் , YouTubeல் அவரது உரைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். தமிழ் ஊடகங்களுக்கு அவர் தந்த பேட்டிகள் மிகக்குறைவு. ஒரு பேட்டியில், தினமலர் அவரிடம் முன்வைத்த கேள்விகள்: நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி……. Continue Reading →

மூன்று முகங்கள்

மீண்டும் மீண்டு பதிவை சொல்புதிது குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு சில விவாதங்கள். ஜெமோவுடனான மானசிகமான உரையாடல்கள் தன்மீட்சி கட்டுரை வாசிப்புகள். தெளிவடைந்துவிட்டேனா என தெரியவில்லை. ஆனால், முன்னோக்கி செல்ல பிடிப்புகளை உருவகித்துள்ளேன். 1. அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். இது எனக்கான வேலை இல்லை. நான் இருக்க வேண்டிய இடமும் இல்லை. ஆனால், என் இடத்தை… Continue Reading →

ஒரு கதை…

ஜெமோ, தனது தளத்தில் கொடுத்திருந்த சுட்டியின் மூலம், இந்த கதையை வாசித்தேன். அறைக்குள் புகுந்த தனிமை பொதுவாக மொழி கூடி வராத கதைகளில் தேர்ந்த இலக்கியம் நிகழ்வதில்லை என்பது என் எண்ணம். அதை, இந்த கதை மாற்றியுள்ளது. இதை ஒரு சிறந்த படைப்பு என கூறுவதில் எனக்கு தயக்கம்‌ இருந்தாலும், இந்த கதையின் பேசுகளம் முக்கியமானது…. Continue Reading →

புதிய வாசகர் சந்திப்பு – நாமக்கல்

நாமக்கல்லில் நடைப்பெற்ற ஜெமோவுடனான புதிய வாசகர் சந்திப்பு குறித்து!

« Older posts

© 2025 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑